மட்டக்களப்பிலிருந்து காத்தான்குடியை இணைக்கும் இலங்கையின் மிக நீளமான இரும்புப் பாலமான கல்லடி பாலம் பாடும் மீன்களுக்கு பிரசித்திப்பெற்ற இடமாகும். இரவில் மீனவர்களுக்கு வழிகாட்ட மீன்கள் பாடிக்கொண்டே நீந்திச் செல்வதாக கதைகள் உண்டு. மேலும் இலக்கியங்களில் கூட நீர்மகளிர் இசைக்கும் இசை என வர்ணிக்கப்படுகின்றது. இது இலங்கையில் புதைந்து கிடக்கும் அற்புதங்களில் ஒன்றாக கண்டறியப்பட்டுள்ளது.