கந்தேகம தொல்பொருள் வலயத்தில் அமைந்துள்ள தானிகல மலை இயற்கை எழில் கொஞ்சும் இடமாகும். இதன் உச்சி வட்ட வடிவமான பரந்த வெளியைக் கொண்டுள்ளது. ஏலியன் மலை என்று அழைக்கப்படும் இவ்விடத்தில் வேற்றுகிரக வாசிகள் வந்து போவதாக நம்பப்படுகின்றது. ஏனெனில் இந்த இடத்திற்கு மேல் பறக்கும் தட்டுகளை அவதானித்துள்ளதாக இங்குள்ள கிராமவாசிகள் கூறுகின்றனர். இது இலங்கையில் புதைந்து கிடக்கும் அற்புதங்களில் ஒன்றாக கண்டறியப்பட்டுள்ளது.